Thursday, 13 July 2017

இன்னும் என்னவெல்லாம்

👩👩👩👩‍🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
         but
அந்த கரண்டித்தான் எங்க இருக்கூனு தெரியல்ல
                                 
😜😜😜😜😜😜😋😋


🕺 ''டேய்..ஓடாதே..
நில்ரா..

எதுக்குடா

இவளை தூக்கிட்டு ஓடறே ?''

''நீங்கதானே சார் சொன்னீங்க.

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃


🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"

"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"

"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"


👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 😉😉😉

                   ***********

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?

கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....

கல்யாணத்துக்கு முன்னாடி,
எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?

அட,
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!!

                  **********

                       

சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்.....

கதையின் கருத்து :--
ஒரு புருஷன...
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது.....!!!

              *************
                       
                       

மனைவி:
ஏங்க!  உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்.....!

கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....!
புத்திக்கு எங்கே போவ!!??

                  *************

                           

கணவன்:
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"....

மனைவி:
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !

                 **************

                           

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!
எவ்வளவு அதிகாரங்கள்.

😳😳🙄

     ********************

 🤒 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,

🤕 மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..

        *******************

😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜

       ******************

🙋‍♂ தக்காளி சோறு பிரியாணி மாறி இருந்தா அது அம்மா சமையல்!

💁‍♂ பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!

😤 சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
😂😂
     
        ***************

💰 பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...

அவன் தான் நகை கடைக்காரன்😆

       *************.. காலை வணக்கம்...

No comments: