Monday, 27 February 2017

கொன்றை_மலர்கள் & தங்கமலர்_சரக்கொன்றை

🌹#கொன்றை_மலர்கள் 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹
வெப்ப மண்டலம் மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும். கோடை வறட்சியையும் தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு மருத்துவக்குணம் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

#தங்கமலர்_சரக்கொன்றை 🌹

கொன்றை மலர்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி சரியாகும். கூடவே வயிற்றுக்கோளாறு, மேகக்கோளாறு போன்றவையும் சரியாகும்.
சரக்கொன்றை காயின் உள்ளே இருக்கும் சதைப்பற்றை, நாம் சமையலில் சேர்க்கும் புளியைப்போன்று பயன்படுத்தினால் பித்தம் சரியாகும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். இன்னும் பல பலன்கள் இந்த சரக்கொன்றை மலரில் உள்ளது.

No comments: