Monday, 27 February 2017

கொலையாளி யார்? – குற்றவியல் புதிர்

ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் 7 ஆவது மாடியில் ஜித் குடியிருந்தார். ஜித்தின் வயது 70 இற்கு மேல். நோயாளியான ஜித்தால் சவகாசமாக நடமாட முடியாது. அதனால், அவருக்கு தேவையான அனைத்து பொருட்களும் பெரும்பாளும் வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்கப்படும்.
புதன் கிழமை, வழமையாக தபால் போடுபவர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்த அவர், கதவு துவாரத்தினூடாக நோட்டமிட்டார். உள்ளே, இரத்தக்கறையுடன் ஒரு உடல் கிடந்தது. முதியவரின் உடல் என்பதை ஊகித்த அவர், காவலர்களுக்கு (பொலிஸிற்கு) தகவல் தெரிவித்தார்.
காவலர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து நோட்டமிட்டார்.
வீட்டிற்கு வெளியே, இரண்டு பால் பெட்டியும், திங்கட்கிழமை பத்திரிகையும், திறக்கப்படாத சில தபால்களும் மேலும் சில அன்பளிப்பு பொருட்களும் இருந்தன.
ஒரு மணி நேரத்தில் கொலையாளியுடன் அரவிந்த் காவல் நிலையத்திற்கு சென்றார்.
கொலையாளி யார்? எப்படி அரவிந்த் கொலையாளியை கண்டு பிடித்தார்?

No comments: