ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 3 (துண்டுகளாக வெட்டியது), துவரம்
பருப்பு – 1/3 கப், புளி – 1 சிறிய நெல்லிக்காய் அளவு ,சாம்பார் பொடி – 2
டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 1/2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது
செய்முறை: முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். பின் புளியை 1 கப் சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப்
போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 3
விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு
கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில்
முருங்கைக்காயைப் போட்டு, 1 நிமிடம் வதக்கி, பின் அதில் சாம்பார் பொடி,
தேவையான அளவு உப்பு, மஞ்சுள் தூள் சிறிது சேர்த்து 1 நிமிடம் கிளறி, 3/4
கப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும். முருங்கைக்காயானது
முக்கால் பதம் வெந்ததும், அதில் 1 கப் புளிச்சாறு சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க விட வேண்டும். அதற்குள் முருங்கைக்காயும் நன்கு
வெந்துவிடும். இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 1/2
கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க
விட்டு இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் ரெடி!!!
No comments:
Post a Comment