ஆட்டுக் குடல் குழம்பு
ஆட்டுக் குடல் குழம்பு
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
- மல்லிப்பொடி – 4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது
- குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.
- சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.
- சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு
அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து
தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை
தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில்
போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன்
இறக்கவும்
No comments:
Post a Comment