Thursday, 16 April 2015

வீட்டுக் குறிப்புகள்

வீட்டுக் குறிப்புகள்

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதில் கொஞ்சம் சோயா மாவு, கம்பு மாவு, கேழ்வரகு மாவும் போட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும். கூடவே எல்லா விதமான சத்துக்களும் குழந்தைகளுக்கு
கிடைக்கும்.


காஃபிப் பொடி பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்படியெனில், அதை ப்ளாஸ்டிக் பையுடனேயே வைத்திருங்கள். பாத்திரத்தில் கொட்டி வைக்க
வேண்டாம்


மழை, பனிக் காலங்களில் டேபிள் சால்ட் போட்டு வைத்திருக்கும் குப்பிகளில் கொஞ்சம் அரிசியையும் போட்டு வைத்தால், உப்பு தடையின்றி சீராக வரும். 

வீட்டு வேலையை அதிகமாகச் செய்கிற பெண்களுக்கு உள்ளங்கைகள் கடினமாகிவிடும். இவர்கள், கிளிசரின், சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தடவி வந்தால், கைகள் மிருதுவாகும். 

 பாட்டிலின் மூடியைத் திறக்க முடியவில்லையா? ஈரத் துணியால் மூடியை இறுகப் பற்றிக் கொண்டு திருகினால் சுலபமாகக் கழன்று வந்துவிடும் 

No comments: