Tuesday, 21 April 2015

சிறு தானிய முருங்கைக்கீரை அடை

 சிறு தானிய முருங்கைக்கீரை அடை

ஊறவைத்த கம்பு , ஊறவைத்த கேழ்வரகு , பச்சப்பயறு , துவரம் பருப்பு , கடலைப் பருப்பு , வெங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , மஞ்சள் தூள் , பெருங்காயத் தூள், கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு, எண்ணெய், இஞ்சி, முருங்கைக்கீரை
செய்முறை :
1. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. கம்பு, கேழ்வரகு, பச்சைப் பயறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அறைத்து வைத்து கொள்ளவும்.
3. பின்பு மிக்ஸியில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பையும் சேர்த்து அறைத்து கம்பு கலவையோடு சேர்த்து கலந்து வைக்கவும்.
4. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காய தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, முருங்கைக்கீரை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள மாவோடு சேர்க்கவும்.
5. இறுதியாக மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை மாவோடு சேர்த்து கலந்து தவாவில் அடையை வார்த்து எடுக்கவும்

No comments: