அஹனி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதிஅரிசி- 1/2கிலோ
பல்லாரி – 1/4கிலோ
தக்காளி -2
பச்சமிளகாய் 12-15
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தலா 2
ரம்ப இலை -2
எலுமிச்சைப்பழம் – 1
நெய் -100கிராம்
தேங்காய் எண்ணெய்-50கிராம்
உப்பு – தேவைக்கு
தயிர் -1/2கப்
மட்டன் – 1/2கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1/4 கப்
கொத்தமல்லி, புதினா -1கட்டுஅரைக்க:தேங்காய் – 1/4மூடி
கசகசா – 10கிராம்
முந்திரி 10கிராம்
பாதம் 10கிராம்
பிஸ்தா 10கிராம்
சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தனியாக வைக்கவும்
செய்முறை:
1.கறியுடன் 2ஸ்பூன் தயிர், 1ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து விரவி
1/2மிணிநேரம் ஊற வைக்கவும்.
2.தாளிக்க மீதி தயிர், மீதி இஞ்சிபூண்டு பேஸ்ட், ரம்ப இலை, பட்டை, கிராம்பு,
ஏலம் சேர்த்து தனியாக வைக்கவும்
செய்முறை
1.பாஸ்மதி அரிசியினை 10 நிமிடம் ஊற வைக்கவும்.அடி கணமான பாத்திரத்தில்
எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த பின்புதாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு
வதக்கவும்.
2.வதங்கிய பின்புவெங்காயம், தக்காளி, பச்சமிளகாய் சேர்த்து பச்ச வாசனை
போகும்வரை வதக்கவும்.
3.நன்றாக வதங்கிய பிறகு விரவி வைத்த மட்டனை போடவும்.
4.இதனுடன்மிளகாய்த்தூள், அரைத்த நட்ஸ் விழுது, கொத்தமல்லி, புதினா,
உப்புசேர்த்து நன்றாக மூடிப்போட்டு 1/2 மணிநேரம் வேகவிடவும். கறி நன்றாக
வேகம் வரை வேகவிடவும்.
5.பிறகு 1கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க
வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும்.
6.நன்றாக கிண்டி பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகணமான
பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10-15 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த
15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.
7.பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும்.
டிஸ்கி:குறைந்த தணலில் அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை
தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது.
பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால்
பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.
No comments:
Post a Comment