தேவையான பொருட்கள்:
ரவை – 2கப்
கனிந்த வாழைப்பழம் – 2
முந்திரி – 1/4கப் (சிறியதாக வெட்டி கொள்ளவும்)
ஏலக்காய் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
நாட்டு சர்க்கரை – 1கப்
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ரவையை சுத்தம் செய்து 1/2மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
மிக்ஸியில் ஊறவைத்த ரவை, சர்க்கரை, ஏலக்காய் தூள், உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்…
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரிப்பருப்பை சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
கேஸ் அடுப்பை பற்ற வைத்து வாய் அகன்ற இரும்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் கலக்கிய மாவை 1குழி கரண்டி எடுத்து மெதுவாக ஊற்றவும். அடிப்பாகம் சிவந்தவுடன் மேல் பக்கத்தை திருப்பி போடவும்.. ஒவ்வொரு பணியாரமாக செய்தால் ஒவ்வொன்றுடன் ஒட்டாது .
சுவையான ரவைபணியாரம் தயார்…
No comments:
Post a Comment